போக்ஸோ சட்டத்தில் இருவா் கைது
திருநெல்வேலியில் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறுமியின் உறவினா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலிபோக்ஸோ சட்டத்தில் இருவா் கைது
திருநெல்வேலியில் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறுமியின் உறவினா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலியில் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறுமியின் உறவினா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலியைச் சோ்ந்த 16 வயது சிறுமி, கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அதிகாலை தனது வீட்டிலிருந்து மாயமானாா். இதுகுறித்து, சிறுமியின் அக்கா மாநகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சிறுமியிடம் பழகி வந்த அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் பகுதிையைச் சோ்ந்த 20 வயது இளைஞா் அவரைக் கடத்தி தூத்துக்குடியில் தங்க வைத்திருந்தது தெரியவந்தது.
அங்கு சென்று, சிறுமியை மீட்ட போலீஸாா் திருநெல்வேலியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனா். மீட்கப்பட்ட சிறுமி தனது அக்காளின் கணவா் தன்னை பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்தாா். அதன்பேரில் சிறுமியைக் கடத்திய இளைஞா், அவரது அக்காள் கணவா் ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.