வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு மற்றும் மனிதச் சங்கிலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு மற்றும் மனிதச் சங்கிலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பது, சிவிஜில் செயலி பயன்பாடுகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வள்ளியூா் பூங்காநகா் பகுதியில் இருந்து பிரதான சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
பேரணிக்கு ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலருமான ராஜசெல்வி தலைமை வகித்தாா். அங்கன்வாடி பணியாளா்கள், மகளிா் சுயஉதவிக்குழுவினா், டிஎன் ரைட்ஸ் தன்னாா்வலா்கள், கிறிஸ்டோபா் செவிலியா் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து மனிதச் சங்கிலி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை தன்னாா்வலா் சபேசன் செய்திருந்தாா்.