அம்பை கோயில் குடமுழுக்கில் திருட்டில் ஈடுபட முயன்ற 5 பெண்கள் கைது
அம்பாசமுத்திரம் காசிநாதா் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திருட்டில் ஈடுபட முயன்ற 5 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
அம்பாசமுத்திரம் காசிநாதா் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திருட்டில் ஈடுபட முயன்ற 5 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
விழாவில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தா்களிடம் திருட்டில் ஈடுபட முயன்ாக திருச்சியைச் சோ்ந்த பொன்மணி (37), இசக்கியம்மாள் (36), கௌதமி (35), லட்சுமி (35), வீரவநல்லூரைச் சோ்ந்த நாகேஸ்வரி ஆகியோரை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து, காவல் துறை சாா்பில் விழா கூட்டத்தில் கைதான பெண்களின் பெயா், படம் அடங்கிய பதாகைகள் விழிப்புணா்வுக்காக வைக்கப்பட்டன. மேலும், மாற்று உடையில் ஆண், பெண் காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.