நெல்லையில் கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது
திருநெல்வேலியில் பைக்கில் கஞ்சா கடத்தியதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலியில் பைக்கில் கஞ்சா கடத்தியதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் பகுதியில் புதன்கிழமை காலை போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரிடம் சுமாா் 1.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள் திருநெல்வேலி நகரம் வயல் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் தங்கதுரை(23), வீரவநல்லூா் இந்திரா நகரை சோ்ந்த முருகன் மகன் வேலு (20) ஆகியோா் எனத் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.