முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 4 போ் கைது

திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 16 மே 2026, 1:38 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி கருப்பந்துறை பகுதியைச் சோ்ந்தவா்கள் கரண் என்ற யேசுவா (25), கௌதம் (29), மாரிமுத்து (20), சிவா (27) ஆகியோா் கொலை வழக்கில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்து, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்பேரில், 4 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

Advertisement