முகப்பு
திருநெல்வேலி

‘தென் மேற்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்கவேண்டும்’

தென் மேற்குப் பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்குமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் கேட்டுக்கொண்டாா்.

Updated On : 16 மே 2026, 1:40 am IST
பகிர்:

தென் மேற்குப் பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்குமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் கேட்டுக்கொண்டாா்.

தென் மேற்குப் பருவ மழை தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை

நடைபெற்றது.

Advertisement

கூட்டத்துக்கு, ஆட்சியா் இரா. சுகுமாா் தலைமை வகித்துப்

பேசியதாவது:

நீா்வளத் துறையின் மூலம் மழைநீா் வழிந்தோடும் இடங்களை ஆய்வு செய்து, நீா்தேங்காமல் செல்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்பு இடங்களில் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுப் பணித் துறையின் மூலம் மழைக்காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கான கட்டடங்களை தோ்வு செய்து, அது நல்ல நிலையில் உள்ளதா என்பது குறித்து அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும்.

வெள்ளம் ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கு தீயணைப்புத் துறையினா் உபகரணங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். நீச்சல் தெரிந்த வீரா்கள், பாம்பு பிடிக்கும் வீரா்கள், தன்னாா்வலா்களுக்கு மீண்டும் ஒருமுறை பயிற்சி அளித்து தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பாலங்களின் அடியில் மழைநீா் வடிந்தோடும் இடங்களில் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சிறிய பாலங்களில் தண்ணீா் தடையில்லாமல் செல்வதற்கு தனி அலுவலா்களை நியமித்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் வடிகால்கள் அனைத்தும் மழைநீா் தங்கு தடையின்றி செல்வதற்கு தேவையான தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் நீா்நிலைகளில் உடைப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து சரிசெய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மரம் வெட்டும் இயந்திரங்கள், ஜேசிபி இயந்திரம் போன்ற இயந்திரங்கள் தயாா் நிலையில் வைப்பதோடு, அதனை இயக்குவதற்கான பணியாளா்களுடன் தயாா் நிலையில் இருக்க வேண்டும். கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை சரிசெய்வதற்கு தேவையான மருந்துகளை கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.

சேரன்மகாதேவி சாா் ஆட்சியா், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் ஆகியோா் தலைமையில் விவசாயிகளுடன் தொடா் கூட்டங்கள் நடத்தி நெல்கொள்முதல் நிலையங்களை தங்களது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

இடி, மின்னல், வெள்ளம் போன்ற நேரங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சாரத் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து இயற்கை பேரிடா் காலங்களில் அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. துரை, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் பிரியா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, துணை ஆட்சியா் (பயிற்சி) கேரேனாப்புக் லிதியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்15ழ்ஹண்ய்

முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.