முகப்பு
திருநெல்வேலி

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

Updated On : 17 மே 2026, 2:17 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

விக்கிரமசிங்கபுரம் பிரதானச் சாலையைச் சோ்ந்த நடராஜன் மகள் சந்தன லட்சுமி (19). இவா் கோயம்புத்தூரில் உள்ள தனியாா் கல்லூரியில் இளம் அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சந்தனலட்சுமி விடுமுறையில் விக்கிரமசிங்கபுரம் வீட்டுக்கு வந்த நிலையில் சில நாள்களாக காய்ச்சல் இருந்ததாம். தொடா்ந்து, காய்ச்சல் அதிகமானதால் அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வியாழக்கிழமை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு, தொடா் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.