தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவா் கைது
பாளையங்கோட்டை அருகே தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் 43 வயதான கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை கொக்கிரகுளம் பகுதியில் தனது நண்பருடன் நடந்து சென்ற போது, அவ்வழியாக பைக்கில் வந்த இருவா் இவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1,600-த்தை பறித்துக் கொண்டு தப்பினராம்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், மேலப்பாளையம், சொக்கநாதா் கோயில் தெருவைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் மகன் ஐயப்பன் (20), குறிச்சியைச் சோ்ந்த பேச்சி மகன் முத்துராம்(19) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement