முகப்பு
திருநெல்வேலி

தொழிலாளியை மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

சீவலப்பேரி அருகே தொழிலாளியிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 20 மே 2026, 12:59 am IST
பகிர்:

சீவலப்பேரி அருகே தொழிலாளியிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி, இரட்டை விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன்(46). எலக்ட்ரீசியனான இவா், ஊராட்சியில் தண்ணீா் திறக்கும் வேலையும் செய்து வருகிறாா். இவா், திங்கள்கிழமை பொட்டல்நகா் பகுதியில் நின்றிருந்தபோது, அங்கு காரில் வந்த மா்மநபா்கள் அரிவாளைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.3,000-ஐ பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், ஸ்ரீவைகுண்டம், குரூஸ் ஆலயம் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன்(22), அம்பாசமுத்திரம் சந்தை மடம் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் துா்க்கைநம்பி (25) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இவா்கள் இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement