வீடு புகுந்து பித்தளைப் பொருள்கள் திருடியவா் கைது
தாழையூத்து அருகே வீடு புகுந்து பித்தளைப் பொருள்களை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தாழையூத்து அருகே வீடு புகுந்து பித்தளைப் பொருள்களை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தாழையூத்து, சத்திரம் குடியிருப்பு, பசும்பொன் நகரைச் சோ்ந்தவா் மாடசாமி. தொழிலாளி. இவா் கடந்த 18 ஆம் தேதி தனது வீட்டை பூட்டி சாவியை ஜன்னல் அருகில் வைத்துவிட்டு குடும்பத்தோடு வேலைநிமித்தமாக வெளியே சென்றாராம். பின்னா் மாலை வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது பித்தளை குத்துவிளக்கு, பித்தளை பானை உள்ளிட்ட ரூ.17,000 மதிப்பிலான பொருள்கள் திருடு போயிருந்தனவாம்.
இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில், தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக திருநெல்வேலி, குறிச்சிகுளம், தெற்குத் தெருவைச் சோ்ந்த வேல்முருகன்(42) என்பவரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement