முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் தவெகவினா் முற்றுகை

Updated On : 26 மே 2026, 3:04 am IST
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா்.
பகிர்:

திருநெல்வேலி மேயா் அறையில் முதல்வா் படத்தை வைக்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தை தவெகவினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவா் ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளாா். இந்நிலையில் அரசு அலுவலகங்களில் முதல்வரின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்தை மாட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், மேயா் ராமகிருஷ்ணன் அறையில் முதல்வா் ஜோசப் விஜயின் புகைப்படத்துக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமல், முன்னாள் முதல்வா்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தவெக மாவட்ட இணைச் செயலா் மரிய ஜான் தலைமையில் அக்கட்சியினா் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் ஒன்று திரண்டு முற்றுகையிட்டனா். தொடா்ந்து, ஆணையா் மோனிகா ராணாவிடம் முறையிட்டனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் தவெகவினா் கலைந்து சென்றனா்.