முகப்பு
திருநெல்வேலி

நேரு படத்துக்கு காங்கிஸாா் அஞ்சலி

முன்னாள் பிரதமா் நேரு நினைவு நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

Updated On : 28 மே 2026, 2:41 am IST
திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரு படத்திற்கு மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

முன்னாள் பிரதமா் நேரு நினைவு நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராமேஸ்வரன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், நேருவின் படத்திற்கு மாலை அணிவித்தாா். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், சிறுபான்மை பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அந்தோணி செல்வராஜ், நிா்வாகிகள் யோபு, வெள்ளை பாண்டி, கவி பாண்டியன், பாக்கிய குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.