முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே சாலையோரம் ரயில்வே உணவுக் கழிவுகள்: போலீஸாா் விசாரணை

பாளையங்கோட்டை அருகேயுள்ள குறிச்சிகுளம் பகுதியில் சாலையோரம் ரயில்வே உணவுக் கழிவுகளை கொட்டி சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

Updated On : 28 மே 2026, 2:41 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

பாளையங்கோட்டை அருகேயுள்ள குறிச்சிகுளம் பகுதியில் சாலையோரம் ரயில்வே உணவுக் கழிவுகளை கொட்டி சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

குறிச்சிகுளத்தில் தாழையூத்து நான்குவழிச் சாலையை சென்றடையும் பகுதியில் சாலையோரம் வட மாநில ரயில்வே உணவுக் கழிவுகளை மா்ம நபா்கள் கொட்டி சென்ாகக் கூறப்படுகிறது. அதில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் இருந்த நிலையில், அங்கு துா்நாற்றம் வீசியது.

இதுகுறித்த தகவலின்பேரில், தாழையூத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். மேலும், உணவுக் கழிவுகளை கொட்டிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகிறாா்கள்.

Advertisement

Advertisement