தூத்துக்குடி

கட்டுரைப் போட்டி: சக்தி விநாயகர் பள்ளி மாணவர் முதலிடம்

DIN

மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலய பள்ளி மாணவர் முதலிடம் பிடித்தார்.
தி இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மெட்டல்ஸ் நிறுவனம் சார்பில், பள்ளி மாணவர்கள் அறிந்து வைத்துள்ள உலோகங்களின் தன்மைகள் குறித்த மாநில அளவிலான போட்டி திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. இதில், மாநிலம் முழுவதும் இருந்து 62 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். கட்டுரைப் போட்டியில் தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலய பள்ளி மாணவர் நா. ஆதிசங்கர் முதல் பரிசை பெற்றார். அவரை பள்ளிச் செயலர் பழனிசாமி, முதல்வர் கனகராதா, துணை முதல்வர் ஜெயலட்சுமி அண்ணாமலை, தலைமையாசிரியை விமலா ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT