தூத்துக்குடி

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

DIN

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி கிறிஸ்துமஸ்  விழா மற்றும் ஈகை விழா  நடைபெற்றது.  
   பொறியாளர் பிரபாகர் பெனடிக் தலைமை  வகித்து மாணவர்களுக்கு  இலவச புத்தாடைகளை வழங்கி கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். தூய யோவான் பேராலய  உதவிகுரு கே. தனசிங் ஜெபம் செய்தார். தலைமையாசிரியர்ஆ. ஜான்சண் பால் டேனியல் வரவேற்றார். இதில் 300 ஏழை மாணவர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. தொடர்ந்து  மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.  உதவி தலைமையாசிரியர் ஜெ.  அதிசயம் நன்றி கூறினார். 
விடுதியில்: மர்காஷிஸ் பள்ளி எஸ்.ஏ.தாமஸ் விடுதியில் நடைபெற்ற  கிறிஸ்துமஸ் விழாவுக்கு தூய யோவான் பேராலய தலைமைகுரு  எட்வின் ஜெபராஜ் தலைமை வகித்தார்.  பள்ளித் தலைமை  ஆசிரியர் ஜாண்சன் பால் டேனியல் வரவேற்றார். விடுதி தலைமை காப்பாளர் தனராஜ் ஜேக்கப் முன்னிலை வகித்தார். நெல்லை காருண்யா ஹெல்த் சென்டர் நிறுவனர் டாக்டர் கிளாட்வின், டாக்டர். ஜீனட் கிளாட்வின்  ஆகியோர்  மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து மாணவர், மாணவிகளின்  கலைநிகழ்ச்சி நடைபெற்றது.  விடுதி  உதவி காப்பாளர் சுஜித் செல்வசுந்தர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT