தூத்துக்குடி

மல்யுத்தம்: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவிக்கு வெண்கலப் பதக்கம்

DIN

நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவி வெண்கலப் பதக்கம் வென்றார்.
தமிழ்நாடு தன்னார்வ மல்யுத்த சங்கம் சார்பில், நாமக்கல்லில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான  மல்யுத்தப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்வள இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் முதலாமாண்டு மாணவி ஜென்சி கலந்துகொண்டார்.
சிறப்பாக விளையாடிய மாணவி ஜென்சி வெண்கலப் பதக்கத்கம் வென்றார்.  இதையடுத்து, மாணவி ஜென்சியை கல்லூரி முதல்வர் கோ. சுகுமார்,  உடற்கல்வி இயக்குநர் ராஜாசிங் கேரிஸ்டன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT