தூத்துக்குடி

பல்கலைக்கழக தேர்வில் முதலிடம்: கல்லூரி மாணவிக்குப் பாராட்டு

DIN

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பெற்ற சாத்தான்குளம் கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சாத்தான்குளத்தில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் உறுப்புக் கல்லூரி கணிதத் துறை மாணவிகள், நடந்து முடிந்த பல்கலைக்கழகத் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், கணிதத் துறை முதுகலை மாணவி சுடலைவடிவு என்ற ராஜேஸ்வரி முதல் இடத்தை பெற்று தங்கப் பதக்கம் பெற்ற்றார். மாணவி கலையரசி கணிதத்தில் இரண்டாவது இடமும், தமிழ் பாடத்தில் ஐந்தாவது இடமும் பெற்றுள்ளார். மாணவி நாராயண அழகுஈஸ்வரி 19ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
 அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், சுடலைவடிவுக்கு தங்கப் பதக்கமும் மற்றும் மற்ற மாணவிகளுக்கு பட்டமும் வழங்கினார்.   சிறப்பாக தேர்ச்சி பெற்ற இம்மாணவிகளை சாத்தான்குளம் கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT