தூத்துக்குடி

நாசரேத்தில் பல் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல்

DIN

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி - நாசரேத் திருமண்டிலம் சார்பில், நாசரேத் தூய யோவான் பேராலய பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா, அங்குள்ள கைத்தொழில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
திருமண்டில பிரதம பேராயரின் ஆணையர் ஜெசுசகாயம் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். திருமண்டல உப தலைவர் லூர்துராஜ் ஜெயசிங் ஆரம்ப ஜெபம் செய்தார். தூய யோவான் பேராலய தலைமை குரு தேவசகாயம் வரவேற்றார். திருமண்டில லே செயலர் எஸ்.டி.கே. ராஜன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், கல்லூரிகளின் நிலைவரக்குழுச் செயலர் ஜெபசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமண்டில குருத்துவச் செயலர் தேவராஜ் ஞானசிங், முன்னாள் எம்.பி. ஏ.டி.கே. ஜெயசீலன் உள்ளிட்டோர் பேசினர். கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்றத் தலைவர் தாமஸ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT