தூத்துக்குடி

கார் மரத்தில் மோதி இளைஞர் சாவு

DIN

கழுகுமலை அருகே திங்கள்கிழமை கார் மரத்தில் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 கழுகுமலை வேளாளர் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாரியப்பன்(30)  ஓட்டிச் சென்ற கார், கோவில்பட்டியிலிருந்து கழுகுமலை நோக்கி சென்று கொண்டிருந்த போது,  கழுகுமலை அருகே காளாங்கரைப்பட்டி விலக்கு அருகே திடீரென நிலைகுலைந்து சாலையோர மரத்தில் மோதியதில் காரில் இருந்த கழுகுமலை தெற்கு ரத வீதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரிமுத்து(28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் மாரியப்பன் காயமடைந்தார்.   தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் காயமடைந்தவரை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கழுகுமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய ஆடவா், மகளிா் ரிலே அணிகள் பாரீஸ் ஒலிபிக் போட்டிக்குத் தகுதி

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

SCROLL FOR NEXT