தூத்துக்குடி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சாவு

DIN

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சங்கரன்கோவில் வட்டம், குருவிகுளம், அழகுனேரியைச் சேர்ந்த அந்தோணி மனைவி செல்லம்மாள் (58). கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த இவர் செவ்வாய்க்கிழமை ஊருக்கு திரும்புவதற்காக கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது,  திருநெல்வேலியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற வாகனம், செல்லம்மாள் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT