தூத்துக்குடி

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

DIN

சாத்தான்குளம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் செவவாய்க்கிழமை இறந்தார்.
உசரத்துக்குடியிருப்பைச் சேர்ந்த ஜெயராஜ் மனைவி பத்திரகாளி (45). இவர் கடந்த 10 நாள்களுக்கு முன் அவரது மகன் ஜெயமுருகனின் பைக்கில் பின்னால் அமர்ந்து சாத்தான்குளம் வந்தாராம். நரையன்குடியிருப்பு அருகில் வரும்போது திடீரென பைக்கில் இருந்து பத்திரகாளி தவறிவிழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவர் இறந்தார். இது குறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் பொன்னுச்சாமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT