தூத்துக்குடி

இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம்

DIN

ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பேய்க்குளத்தில்  நடைபெற்றது.
 மேற்கு ஒன்றியத் தலைவர் முத்துராமன் தலைமை வகித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் வி.எஸ். முருகேசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொதுச் செயலர் சரவணன் வரவேற்றார். இதில் மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார், மாநில பொதுச் செயலர் முருகானந்தம் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் முன்னாள் ஊராட்சித் தலைவர் விஜயலட்சுமி மற்றும் அவரது கணவர் ஸ்ரீதரை தாக்கி நகைப்பறித்து சென்று 8 மாதங்களாகியும், இதுவரை குற்றவாளிகள்  கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 இதில் ஒன்றிய துணைத் தலைவர் மாடசாமி, செயற்குழு உறுப்பினர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய பொருளாளர் வெள்ளத்துரை நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT