தூத்துக்குடி

மூதாட்டியை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு

DIN

கோவில்பட்டியில் மூதாட்டியை தாக்கியதாக தந்தை மற்றும் மகன் மீது போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 4ஆவது தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மனைவி மிக்கேல்அம்மா(71). இவரது பேத்திக்கும், தெற்கு திட்டங்குளம் காளிமுத்து மகன் கிருஷ்ணகுமாருக்கும்(25), திருமணம் செய்து வைப்பது குறித்து பேசப்பட்டதாம்.
இந்நிலையில், மிக்கேல்அம்மா ஜாதகம் பொருத்தம் இல்லை எனக் கூறி திருமண பேச்சை நிறுத்தினாராம். இந்நிலையில்  ஞாயிற்றுக்கிழமை சண்முகா நகரில் மிக்கேல்அம்மா தனது மருமகனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது கிருஷ்ணகுமார் மற்றும் அவரது தந்தை காளிமுத்து ஆகிய இருவரும் பைக்கை வழிமறித்து, மிக்கேல்அம்மாவை தாக்கினராம். இதில் காயமடைந்த மிக்கேல்அம்மா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT