தூத்துக்குடி

தட்டார்மடத்தில் 5 இடங்களில் மின்வயர் திருட்டு

DIN

தட்டார்மடத்தில் 5 இடங்களில் மின் வயர் திருடிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் வைரவத்தைச் சேர்ந்தவர் செ. சங்கரகுமார் (30). இவரது தோட்டம் தட்டார்மடத்தில் இருந்து செளக்கியபுரம் செல்லும் சாலையோரம் உள்ளது. அவர் தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றபோது அங்கிருந்த மின் மோட்டார் வயர் திருடு போனது தெரியவந்தது. இதேபோல் அருகில் உள்ள 4 தோட்டத்திலும் மின் வயர் திருட்டு நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் தட்டார்மடம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் வழக்குப் பதிந்து, 5 இடங்களில் மின் வயர் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

SCROLL FOR NEXT