தூத்துக்குடி

போலையர்புரம் -நடுவக்குறிச்சி இணைப்புச் சாலை சீரமைக்கப்படுமா?

DIN

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக காணப்படும் போலையர்புரம் - நடுவக்குறிச்சி இணைப்புச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தான்குளம் ஒன்றியத்தில் சாஸ்தாவிநல்லூர், நடுவக்குறிச்சி ஆகிய ஊராட்சி பகுதிகளை உள்ளடக்கியவாறு, போலையர்புரத்திலிருந்து நடுவக்குறிச்சி செல்லும் இணைப்பு சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலை வழியாக சாத்தான்குளம், போலையர்புரம் பகுதியிலிருந்து வாகனங்களில் எளிதில் இடைச்சிவிளை, திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரலாம்.
ஆனால், இந்தச் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுவதால், வாகன ஒட்டிகள் மாற்றுப் பாதையில் கூடுதல் தொலைவு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்த இணைப்புச் சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT