திருச்செந்தூரில் தமிழ்நாடு கருவூலக் கணக்குதுறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் சண்முகராஜன், கருவூலக் கணக்குதுறை அலுவலர் சங்க மாநில கெளரவத் தலைவர் பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி மாவட்ட அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் ஆறுமுகநயினார், ஓய்வு பெற்ற உதவி கருவூல அலுவலர் கோபால், மத்திய செயற்குழு உறுப்பினர் ரவீந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், உதவி கருவூல அலுவலர் பணியிடங்களை கூடுதல் கருவூல அலுவலர் நிலைக்கு மேம்படுத்தி கூடுதல் கருவூல அலுலரின் பதவி உயர்வு தேக்க நிலையை போக்க வேண்டும். கூடுதல் கருவூல அலுவலர், கருவூல அலுவலர் பதவி உயர்வு பெறுவதற்கு பி.காம். அக்கவுண்டன்சி மேல்நிலை விதிகளை தளர்வு செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கருவூல அலுவலர் புதிய பணியிடம் தோற்றுவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத்தலைவர் சுப்பையா வரவேற்றார். தூத்துக்குடி மாவட்டச் செயலர் மனோகர் சாமுவேல் ஞானராஜ் நன்றி கூறினார்.