திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிறப்பு சான்று வழங்கும் முறை அமல்
திருச்செந்தூர் அரசு மருத்துமனையில் பிறப்பு சான்றிதழ் நேரடியாக வழங்கும் முறை அமலுக்கு வந்தது.
திருச்செந்தூர் அரசு மருத்துமனையில் பிறப்பு சான்றிதழ் நேரடியாக வழங்கும் முறை அமலுக்கு வந்தது.
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கேயே மேற்கூறிய சான்றுகளை வழங்க அரசு முடிவு செய்தது.
அதன்படி, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, பயனாளிக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கி பணியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் த.பொன்ரவி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் காயாமொழி வட்டார மருத்துவ அலுவலர் அஜய், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் சு.ஜெய்சங்கர், ச.செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.