தூத்துக்குடி

இளம்பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

DIN

கோவில்பட்டி அருகே வீட்டு முன் நின்று கொண்டிருந்த இளம்பெண் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டியையடுத்த தெற்கு திட்டங்குளம் மேலத் தெருவைச் சேர்ந்த லிங்கசாமி மகள் கார்த்திகா(24). இவர் செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் உள்ள சண்முகா நகர் பல்லக்குச் சாலையை சேர்ந்த சு.வேலம்மாள்(35) வீட்டு முன் நின்றுகொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் கார்த்திகா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டாராம்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT