தூத்துக்குடி

திருச்செந்தூரில் பாமக செயற்குழுக் கூட்டம்

DIN

திருச்செந்தூரில் தெற்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழுக் கூட்டம், திருச்செந்தூர் கீழரத வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. 
தெற்கு மாவட்டச் செயலர் பரமகுரு தலைமை வகித்தார். தெற்கு மாவட்டத் தலைவர் செட்டி ஆறுமுகம், மாவட்ட அமைப்பு செயலர் சிவபெருமாள், மாவட்ட அமைப்பு தலைவர் பார்வதிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில், டெங்கு பரவாமல் தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படவேண்டும். திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து பாடப் பிரிவுக்கும் ஆசிரியர்களை நியமனம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
இதில்,  மாநில அமைப்பு துணைத் தலைவர் வள்ளிநாயகம், மாநில இளைஞரணி துணைச் செயலர் முகம்மது மெய்தின், மாவட்ட இளைஞரணிச் செயலர் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நகரச் செயலர் செந்தில்முருகன் வரவேற்றார். திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் பிரபாகர் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவாவடுதுறை வெள்ளை வேம்பு மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

சி.ஏ.பவுண்டேஷன் படிப்பு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு

மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோட்டில் விரிவுபடுத்தப்பட்ட ஆா்.டி. விவாஹா ஜுவல்லா்ஸ் தொடக்கம்

பூண்டி ஏரியில் இருந்து புழலுக்கு தண்ணீா் திறப்பு

SCROLL FOR NEXT