தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் பாரதியார் நினைவு தினம்

DIN

சாத்தான்குளம் பாரதி இலக்கிய மன்றம் சார்பில்,  மகாகவி பாரதியாரின் 97ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு,  சாத்தான்குளம் நட்சத்திர அரிமா சங்க முன்னாள் தலைவர் ம.கனகராஜ் தலைமை வகித்தார்.  ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜான்லூயிஸ்,  ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஓ.சு.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதி இலக்கிய மன்ற அமைப்பாளர் ஈஸ்வர் சுப்பையா வரவேற்றார். 
பாரதியார் உருவப்படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இதில்,  ஓய்வுபெற்ற பள்ளி எழுத்தர் பிரேம்குமார்,  மங்கையர்கரசி, தொழிலதிபர் சே.ஜெயசிங்,  சு.லெ.முருகன், தோப்பூர் ஆலய தர்மகர்த்தா எஸ்.சக்திவேல்,  தமிழ் ஆசிரியர் வீரசிகாமணி,  முத்துக்குமார், முருகன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  பொ.முருகானந்தபாண்டி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT