முக்காணி கோயில் சார்பில் தாமிரவருணி ஆற்றில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தாமிரவருணி ஆற்றங்கரை முக்காணியில் அமைந்துள்ள அருள்மிகு ராம பரமேஷ்வரர் ஆலயத்தில், வெள்ளிக்கிழமை ருத்ர ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
11 வேத விற்பன்னர்களைக் கொண்டு 1008 ருத்ர ஜெபம் மற்றும் கும்பம் வைத்து வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து தாமிரவருணி மகா புஷ்கர விழாவையொட்டி, அதன் முன்னோட்டமாக புனித நீர் கொண்டு நடைபெற்ற கும்ப பூஜையிலிருந்து புனிதநீர் எடுத்து வந்து, தாமிரவருணி ஆற்றில் தெளிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.