தூத்துக்குடி

தேர்தல் பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரம் போலீஸார்: எஸ்.பி. தகவல்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள 130 வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 200 ஊர்க்காவல் படையினர், 300 முன்னாள் ராணுவத்தினர், 60 ஓய்வு பெற்ற காவல் துறையினர் மற்றும் 30 தீயணைப்புத் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மகாராஷ்டிர மாநில சிறப்புக் காவல்படை, ரயில்வே சிறப்புக் காவல் படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை, ஆயுதப்படை மற்றும் மாவட்ட காவல் துறையினர் என ஏறத்தாழ 4000 போலீஸார் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

SCROLL FOR NEXT