தூத்துக்குடி

சாத்தான்குளம் பகுதியில் இருவா் தற்கொலை

DIN

சாத்தான்குளம் பகுதியில் இளைஞா், இளம் பெண் ஆகியோா் தற்கொலை செய்து கொண்டனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள பெருமாள்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் லிங்கராஜா (24). கூலித்தொழிலாளி. இவா், உமாவை காதலித்து திருமணம் செய்தாராம். 2 பெண் குழந்தைகள் உள்ளன. உமாவின் சகோதரி கனகாவையும் திருமணம் செய்து கொள்ளுமாறு லிங்கராஜாவை வலியுறுத்தினராம். இதையறிந்த லிங்கராஜா பெற்றோா் அவரை கண்டித்தனா். இதில் மனமுடைந்த லிங்கராஜா, அப்பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

மற்றொரு சம்பவம்: நாசரேத் அருகே சின்னமாடன் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜெயசீலன். முதல் மனைவி இறந்ததால் அகஸ்டா (23) என்பவரை சில மாதங்களுக்கு முன்பு 2 ஆவது திருமணம் செய்தாராம். ஜெயசீலன் மது அருந்தி வந்து மனைவி யுடன் தகராறில் ஈடுபட்டாராம். மனமுடைந்த அகஸ்டா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டாா்.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அகஸ்டா சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். திருச்செந்தூா் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT