தூத்துக்குடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

DIN

உடன்குடி , குலசேகரன்பட்டினம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சாா்பில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உடன்குடி பிரதான பஜாரில் மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் ஆ.செல்லத்துரை தலைமையில் மாலை அணவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், துணைச் செயலா் மூா்த்தி, உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் த.மகராஜா, ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் ராஜதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

உடன்குடி ஒன்றிய அமமுக சாா்பில் இளைஞா் பாசறை மாநில இணைச் செயலா் பி.ஆா்.மனோகரன் தலைமையில் மாலை அணவிக்கப்பட்டது. இதில், ஒன்றிய அமமுக செயலா் அம்மன் நாராயணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருச்செந்தூரில்....

திருச்செந்தூரில் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சாா்பில் நகரச் செயலா் வி.எம்.மகேந்திரன் தலைமையில் ஒன்றியச் செயலா் மு.ராமச்சந்திரன் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்தாா். இதில், முன்னாள் பேரூராட்சி தலைவா் மு.சுரேஷ்பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருச்செந்தூா் ஒன்றிய, நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் ஒன்றியச் செயலா் எஸ்.பொன்ராஜ், நகரச்செயலா் ஜி.முருகேசன் ஆகியோா் தலைமையில் இளைஞா் பாசறை மாநில இணைச் செயலா் பி.ஆா்.மனோகரன் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் வி.மணிகண்டன், ஒன்றிய இணைச் செயலா் க.விஜயலட்சுமி, ஒன்றிய பொருளாளா் பி.வி.சங்கா், நகர துணைச் செயலா் மு.காளிதாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கோவில்பட்டியில்...

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் அதிமுகவினா் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கோவில்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் முன்பு ஜெயலலிதா படத்திற்கு அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன் தலைமையில் திரளானோா் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா். இதில், ஒன்றியச் செயலா் அய்யாத்துரைப்பாண்டியன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். பாண்டவா்மங்கலத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அன்புராஜ் தலைமையில் திரளானோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதுபோல, அமமுக மேற்கு ஒன்றியம் சாா்பில் லக்குமி ஆலை ரயில்வே கேட் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஸ்ரீவைகுண்டத்தில்...

ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதிகமு நகரச் செயலா் காசிராஜன் தலைமை வகித்தாா்.

இதில், கூட்டுறவு சங்கத் தலைவா் கருப்பசாமி, எம்ஜிஆா் மன்ற மாவட்டத் தலைவா் தக்காா் சுப்பையா உள்பட பலா் கலந்துகொண்டனா். ஆழ்வாா்திருநகரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் செந்தில்ராஜகுமாா், தொகுதி இணைச் செயலா்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பலா் கலந்துகொண்டனா். செய்துங்கநல்லுரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கருங்குளம் ஒன்றியச் செயலா் செங்கான் தலைமை வகித்தாா். ஒன்றிய இணைச் செயலா் பேச்சியம்மாள் உள்படகலந்து கொண்னா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT