தூத்துக்குடி

வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு குறித்த பயிற்சி முகாம்

DIN

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு குறித்த பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பயிற்றுநர்கள், விழிப்புணர்வு குழு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கான இந்தப் பயிற்சி முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன் தொடங்கிவைத்தார். அவர் பேசுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
முகாமின்போது, முதன்மை பயிற்சியாளர்கள் ராஜீவ் தாகூர் ஜேக்கப், முருகானந்தம் ஆகியோர் சிறப்பு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன். சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் சங்கரநாராயணன் மற்றும் பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பயிற்றுநர்கள், விழிப்புணர்வு குழு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT