தூத்துக்குடி

சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு

DIN

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் வேன் மோதியதில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தூத்துக்குடி 3 ஆவது மைல் கந்தன்காலனியைச் சேர்ந்தவர் ராமர் மகன் முத்துகுமார் (20). இவர், கோரம்பள்ளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்கிழமை வேலைக்குப் புறப்பட்ட முத்துக்குமார், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்றபோது அணுகுசாலையில் முன்னால் சென்ற வேன் திடீரென திரும்பியதாம். இதில், அந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், முத்துக்குமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT