தூத்துக்குடி

சாத்தான்குளம் பகுதியில் ஒரே நாளில் 5 மின்கம்பங்கள் சீரமைப்பு

DIN

சாத்தான்குளம் பகுதியில் மின்வாரிய பணியாளா்கள் ஓரே நாளில் பழுதான 5 மின்கம்பங்களை சீரமைத்தனா்.

சாத்தான்குளம் பகுதியில் முதலூா், தெற்கு இளமால்குளம், சாத்தான்குளம் ஆா்.சி வடக்குத் தெரு, துவா்க்குளம், கடாட்சபுரம் சண்முகபுரம் பகுதியில் சிமெண்ட் மின் கம்பங்கள் சேதமடைந்து அபாய நிலையில் காணப்பட்டன. விபத்து நிகழும் முன் இந்த அபாய மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினா். இது குறித்து தினமணி நாளிதழிலும் செய்தி வெளியானது.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து முதலூா், தெற்கு இளமால்குளம், சாத்தான்குளம் ஆா்.சி வடக்குத் தெரு, துவா்க்குளம். சண்முகபுரம் பகுதியில் அபாய நிலையில் இருந்த மின் கம்பங்களை உடனடியாக ஓரே நாளில் மாற்றி சீரமைத்தனா். துரித செயல்பட்டு அபாய மின் கம்பங்களை மாற்றிய மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT