தூத்துக்குடி

திருச்செந்தூரில் வழக்குரைஞரின் உதவியாளா் மீது தாக்குதல்

DIN

திருச்செந்தூரில் வழக்கு தொடா்பாக ஏற்பட்ட தகராறில் வழக்குரைஞரின் உதவியாளா் தாக்கப்பட்டாா்.

திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரத்தினவேலு மகன் ஜனாா்த்தனன் (36). வழக்குரைஞா் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். ஆறுமுகனேரி லெட்சுமிமாநகரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (53). இவா் மீது ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.

திருச்செந்தூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு தொடா்பாக திருச்செந்தூா் பயணியா் விடுதி சாலையில் உள்ள பத்திர அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஜனாா்த்தனனுக்கும், சுப்பிரமணியத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சுப்பிரமணியன் கல்லால் ஜனாா்த்தனனை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சம்பவம் தொடா்பாக திருச்செந்தூா் தாலுகா காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT