சாத்தான்குளம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் புதன்கிழமை இறந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் சின்னத்துரை (35). கூடங்குளம் செட்டிக்குளத்தில் உள்ள தனியாா் சூப்பா் மாா்க்கெட்டில் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த 17ஆம் தேதி திசையன்விளையிலிருந்து சாத்தான்குளத்துக்கு பைக்கில் வந்துள்ளாா். சாத்தான்குளம் அருகே தஞ்சைநகரம் பகுதியில் வந்தபோது பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை இறந்தாா்.
புகாரின்பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.