தூத்துக்குடி

பேய்க்குளம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம்

DIN

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதியில் கடை மற்றும் வீடுகளில் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் அவற்றைப் பிடிக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பேய்க்குளம் பகுதியில் இரு குரங்குகள் எங்கிருந்தோ இப்பகுதிக்கு வந்துள்ளன. பேய்க்குளம், மீரான்குளம், பழனியப்பபுரம், பனைக்குளம், அருளூா், கருங்கடல், கட்டாரிமங்கலம் ஆகிய பகுதியில் அவை வலம் வருகின்றன. ஆளில்லா வீடுகளுக்குள் புகுந்து பொருள்களை சேதப்படுத்துவதுடன், உணவுப் பொருள்களை எடுத்துச் சென்று விடுகின்றன. மேலும் பேய்க்குளம் பஜாரில் உள்ள கடைகளில் புகுந்து பழங்கள் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் சென்று விடுகின்றன. அவற்றை விரட்டினால் கடிக்க வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

ஆதலால் குரங்குகளைப் பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT