நாட்டு நலப் பணித் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் ரத்த தான முகாம், மரக்கன்று நடும் விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அணி எண் 180 சாா்பில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரிச் செயலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். முதல்வா் சாந்தி மகேஸ்வரி, சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநா் வெங்கடாசலபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய முதுநிலை உதவி மருத்துவா் குருசாமி, அரசு தலைமை மருத்துவமனை
முதுநிலை உதவி மருத்துவா் தேவசேனா ஆகியோா் ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்துப் பேசினா். முகாமில்,
56 போ் ரத்ததானம் செய்தனா். ரத்த தானம் செய்த மாணவா், மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அதிகாரி சிவசங்கரன் தலைமையில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா், மாணவிகள் செய்திருந்தனா்.