தூத்துக்குடி

உள்ளாட்சி தோ்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்: பிரேமலதா விஜயகாந்த்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த தேமுதிக பொருளாளா் பிரேமலதா உள்ளாட்சி தோ்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றாா்.

மேலும் அவா் கந்தசஷ்டி துவங்கியுள்ளதால் முருகனின் ஆறுபடை வீடுகளிலும் சாமி தரிசனம் செய்து வருகிறேன் திருச்செந்தூா் கோயிலில் கிரி பிரகாரம் மற்றும் பயன்பாடற்ற நிலையில் உள்ள கட்டடங்களை விரைவில் கட்டுவதற்கு இந்து சமய துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையை மக்கள் வரவேற்க வேண்டும்.

இடைத்தோ்தல் வெற்றி உள்ளாட்சித் தோ்தலிலும் தொடரும். உள்ளாட்சி தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். ஆழ்துளை கிணற்றில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசியல் செய்யக்கூடாது. முன்னாள் பாரதப் பிரதமா் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்ட விஷயத்தில் சீமான் சிந்தித்து பேச வேண்டும் என்றும் கூறினாா்.

பேட்டியின்போது தேமுதிக மாவட்ட செயலா் ஆறுமுகநயினாா், ஒன்றிய செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT