தூத்துக்குடி

இந்து சமய பண்பாட்டுப் போட்டி:  சீர்காட்சி பள்ளி சிறப்பிடம்

DIN

உடன்குடி வட்டார அளவிலான பள்ளிகளுக்கான இந்து சமய பண்பாட்டுப் போட்டிகளில்     சீர்காட்சி செந்திலாண்டவர் இந்து நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றனர்.
     கன்னியாகுமரி சுவாமி விவேகானந்த கேந்திரம் சார்பில் இந்து சமய பண்பாட்டுப் போட்டிகள் உடன்குடி  தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் பள்ளியில் நடைபெற்றது. இதில்,  பேச்சுப் போட்டிகளில் சீர்காட்சி செந்திலாண்டவர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முத்துசெல்வி, முத்து சரண்யா, மகாலட்சுமி ஆகியோர் முதல் பரிசினைப் பெற்றனர்.
முத்துசெல்வி ஒப்பித்தல் மற்றும் பாட்டுப் போட்டில் முதலிடம் பெற்றார். மாணவிகள் ஜெயலட்சுமி, இன்சா, வைஷ்ணவி, முத்துவேல் ஆகியோர்  இரண்டு மற்றும் மூன்றாமிடங்களைப் பெற்றனர். இவர்களை பள்ளித் தாளாளர் ஜெயசிங், தலைமையாசிரியர் தங்கஇசக்கி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT