தூத்துக்குடி

தருவைக்குளம், புதியம்புத்தூர் பகுதியில் கனிமொழி எம்.பி. நன்றி தெரிவிப்பு

DIN

தருவைக்குளம், புதியம்புத்தூர்  பகுதிகளில் தூத்துக்குடி மக்களைவத்  தொகுதி  உறுப்பினர்  கனிமொழி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
 ஓட்டப்பிடாரம் வட்டம்  தருவைக்குளம், அரசரடி, சில்லாநத்தம், சாமிநத்தம் மற்றும் புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் பொதுமக்களை திமுக மகளிர் அணி மாநிலச் செயலர் கனிமொழி எம்பி வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். 
   அப்போது பொதுமக்களிடமிருந்து குறைகள் தொடர்பான பல்வேறு கோரிக்கை மனுக்களையும்  அவர் பெற்றுக்கொண்டார்.
   அவருடன்,  ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை  உறுப்பினர் எம். சி. சண்முகையா,  தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அருணாச்சலம்,  பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணக்குமார்,  மாவட்ட துணைச் செயலர் பெல்சி புளோரன்ஸ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் அன்புராஜ், மாடசாமி, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வராஜ், பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி செயலர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT