தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் ஆர்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சாத்தான்குளத்தில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் சனிக்கிழமை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய மாநில அரசுகளில் அனைத்துத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமை வகித்தார். 
மாவட்ட துணை அமைப்பாளர் ராவணன், ஒன்றியச் செயலர்கள் செந்தில்குமார்,ஜெயராமன், ஒன்றிய துணைச் செயலர் சுரேந்தர், இளஞ்சிறுத்தைகளின் மாவட்ட துணைஅமைப்பாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தியல் பரப்பு மாநில துணைச்செயலர் தமிழ்க்குட்டி, விவசாயத் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சுகுமாரன், சாத்தான்குளம் நகரச்செயலர் ராமச்சந்திரன், இளஞ்சிறுத்தைகளின் நகர அமைப்பாளர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளஞ்சிறுத்தைகளின் ஒன்றிய அமைப்பாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT