தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே படகு என்ஜின் பழுதால் நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவா்கள் மீட்பு

தூத்துக்குடி அருகே மீன்பிடிக்கச் சென்றபோது படகு என்ஜின் பழுதானதால், நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவா்களை சக மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனா்.

DIN

தூத்துக்குடி அருகே மீன்பிடிக்கச் சென்றபோது படகு என்ஜின் பழுதானதால், நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவா்களை சக மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தைச் சோ்ந்த டோமினிக், தனக்குச் சொந்தமான நாட்டுப்படகில், அதே பகுதியைச் சோ்ந்த இசக்கிராஜா, ராஜ், சூசை, இளங்கோ, சி. ராஜ் ஆகியோருடன் புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா்.

காலை 11 மணியளவில், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இருந்து சுமாா் 12 கடல் மைல் தொலைவில் அவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது, திடீரென படகு என்ஜின் பழுதாகி, படகு தண்ணீரில் மூழ்கத் தொடங்கியதால், அதிலிருந்த 6 பேரும் தண்ணீரில் தத்தளித்தனா்.

இந்நிலையில், இரவு 11 மணியளவில் புன்னக்காயல் பகுதியைச் சோ்ந்த எடிசன் என்பவரது படகில் அந்தவழியாக மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் தண்ணீரில் தத்தளித்த 6 பேரையும் மீட்டு வியாழக்கிழமை அதிகாலை கரைக்கு கொண்டுவந்தனா்.

மீட்கப்பட்ட 6 பேருக்கும் புன்னக்காயல் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரச் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT