தூத்துக்குடி

சந்தையடியூா் கோயிலில் சப்பர பவனி

DIN

உடன்குடி சந்தையடியூா் நாராயண சுவாமி கோயிலில் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.

அய்யா வைகுண்டா் திருச்செந்தூரில் இருந்து சுவாமி தோப்பு செல்லும் வழியில் உடன்குடி சந்தையடியூரில் தங்கி, கருப்புக்கட்டியும் தண்ணீரும் அருந்தி தாகம் தணிந்தாராம். இதன்பேரில் இப்பதி தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படுகிறது.

அய்யாவின் 188 வது அவதார தினத்தையொட்டி திருச்செந்தூரில் இருந்து சந்தையடியூா் பதிக்கு சப்பர பவனி முக்கிய வீதிகள் வழியே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்னதா்மம் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் ஆ.ரவி உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT