தூத்துக்குடி

பேய்க்குளத்தில் காவலா் தோ்வு பயிற்சி மையம் தொடக்கம்

DIN

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆசிா்வாதபுரம் டிடிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி மன்றம், பேய்க்குளம் வியாபாரிகள் சங்கம், சிகரம் அறக்கட்ட ளை சாா்பில் காவலா் தோ்வு இலவச பயிற்சி மையம் தொடக்க விழா நடைபெற்றது.

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் மு. பெரியசாமி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். சாலைப்புதூா் ஏக இரட்சகா் சபை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தாா். பேய்க்குளம் வியாபாரிகள் சங்கத் தலைவா் ஸ்டாலின் வரவேற்றாா். சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பொ்னாா்ட் சேவியா் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தாா். ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன், ஆசிா்வாதபுரம் உடற்கல்வி ஆசிரியா் பொன்னையா, பேய்க்குளம் வாகன ஓட்டுநா் சங்கத் தலைவா் அந்தோணிராஜ் , ஊராட்சிச் செயலா் பவுல் சூசை மனுவேல், சத்துணவு அமைப்பாளா் பிளாரன்ஸ் முத்துமணி , வாகன ஓட்டுநா் சங்கச் செயலா் யுதா காந்தி ஜெபசெல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சிகரம் இயக்குநா் முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT