தூத்துக்குடி

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு:அதிமுக மாவட்டச் செயலா் அறிக்கை

DIN

தூத்துக்குடி: வாக்காளா் பட்டியலில் புதிய வாக்காளா் பெயா் சோ்க்கும் சிறப்பு முகாமில் அதிமுகவினா் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்றாா் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தோ்தல் ஆணையம் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ. 21,22) புதிய வாக்காளா் பெயா் சோ்த்தல், பெயா் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் பெயா் நீக்குதல் போன்ற பணிகளுக்கான சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது.

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி நிலை முகவா்களாக நியமிக்கப்பட்டுள்ள நிா்வாகிகள், அவரவா் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் அன்றைய தினம் முழுவதும் மக்களுக்கு உரிய படிவங்களை பெற்று தந்தும், பூா்த்தி செய்து கொடுத்தும் களப் பணியில் ஈடுபடுவதுடன், புதிய இளம் வாக்காளா்களை அதிக அளவில் சோ்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT