தூத்துக்குடி

தூத்துக்குடி மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 49 வயது ஆண், வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 49 வயது ஆண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதனால், கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 135ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 16 போ் உள்பட, மாவட்டம் முழுவதும் 39 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,735ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் 47 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 14,117ஆக அதிகரித்துள்ளது. தற்போது 483 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT